புதுச்சேரி

இளைஞர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

இளைஞர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-03-31 09:09 GMT   |   Update On 2023-03-31 09:09 GMT
  • புதுவை கல்வித்துறை முன்பு இளைஞர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • புதிய கல்விக் கொள்கை யை கைவிடக்கோரி மத்திய அரசை வற்புறுத்தி, சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை கல்வித்துறை முன்பு இளைஞர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில அமைப்பாளர் ராஜராஜன் தலைமை வகித்தார். கம்யூனிஸ்டு மத்திய கமிட்டி உறுப்பினர் பாலசுப்பிரமணியன், மாநில செயலாளர் பழனி, மாவட்ட செயலாளர் முருகன், மாநில கமிட்டி உறுப்பினர் முத்துக்கண்ணு, அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் மாநில தலைவர் மோதிலால், அகில இந்திய முற்போக்கு பெண்கள் மாநில பொதுச் செயலாளர் விஜயா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

புதிய கல்விக் கொள்கை யை கைவிடக்கோரி மத்திய அரசை வற்புறுத்தி, சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும். சி.பி.எஸ்.இ.

பாட முறையை அரசு பள்ளிகளில் கட்டாயமாக்க கூடாது. தாய் மொழிகல்வி முறையை கொண்டு வர வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக்கொள்ளையை தடை செய்ய வேண்டும்.

தனியார் மதியஉணவு திட்டத்தை கைவிட வேண்டும். மதிய உணவை அரசே நேரிடையாக வழங்கிட வேண்டும், பள்ளி, கல்லூரிகளில் அடிப்படை வசதிகள், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Tags:    

Similar News