கோப்பு படம்.
மருத்துவ கலந்தாய்வை தாமதபடுத்தி புதுவை மாணவர்களுக்கு அரசு துரோகம்-மார்க்சிஸ்டு கண்டனம்
- மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
- கல்விக்கட்டணத்தை நிர்ணயிப்பதிலும், அரசுக்கு ண்டான 50 சதவீத சதவீத இடங்களை பெறுவதிலும் மாணவர்களின் நலன் சார்ந்து செயல்படாமல் தனியார் முதலாளிகளின் அசைவிற்கு ஏற்ப அரசு வளைந்து கொடுப்பது புதுவை மாணவர்களுக்கு செய்யும் துரோகமாகும்.
புதுச்சேரி:
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நடப்பு கல்வி ஆண்டிற்கான மருத்துவ கல்லூரி கல்வி கட்டணத்தை நிர்ணயிப்பதில் அரசுக்கும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் உடன்பாடு ஏற்படவில்லை என்பதால் தகுதி பட்டியலை வெளியிடாமல் தனியார் முதலாளிகளுக்கு ஆதரவாக அவர்களின் லாபத்தை அதிகரிக்கும் விதத்தில் புதுவை அரசு செயல்படுகிறது.
கல்விக்கட்டணத்தை நிர்ணயிப்பதிலும், அரசுக்கு ண்டான 50 சதவீத சதவீத இடங்களை பெறுவதிலும் மாணவர்களின் நலன் சார்ந்து செயல்படாமல் தனியார் முதலாளிகளின் அசைவிற்கு ஏற்ப அரசு வளைந்து கொடுப்பது புதுவை மாணவர்களுக்கு செய்யும் துரோகமாகும்.
இனியும் காலம்தாழ்த்தா மல் உடனடியாக கல்விக் கட்டணத்தை மாணவர்கள் நலன் சார்ந்து நிர்ணயித்து தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசுக்கு கொடுக்க வேண்டிய 50 சதவீதம் இடங்களை பெற்று புதுவை அரசு தகுதி பட்டியலை வெளியிட வேண்டும்
இவ்வாறு ராஜாங்கம் அறிக்கையில் கூறியுள்ளார்.