புதுச்சேரி

கோப்பு படம்

காண்டிராக்டர் மயங்கி விழுந்து சாவு

Published On 2022-06-09 12:13 IST   |   Update On 2022-06-09 12:13:00 IST
  • மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது காண்டிராக்டர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
  • இவருக்கு ராணி என்ற மனைவியும், 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. மற்ற 2 மகள்கள் படித்து விட்டு வீட்டில் உள்ளனர்.

புதுச்சேரி:

புதுவை எல்லைபிள்ளை சாவடி வாஞ்சிநாதன் வீதியை சேர்ந்தவர் அப்பாவு. இவர் மொசைக் காண்டிராக்டர் வேலை செய்து வந்தார். இவருக்கு ராணி என்ற மனைவியும், 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. மற்ற 2 மகள்கள் படித்து விட்டு வீட்டில் உள்ளனர்.

கடந்த 25 நாட்களுக்கு முன்பு அப்பாவுவுக்கு கண் கோளாறு ஏற்பட்டது. இதற்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

வாரந்தோறும் அவர் தனது மனைவியுடன் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கண் பரிசோதனை செய்து கொண்டு வருவது வழக்கம்.

அதுபோல் அப்பாவு தனது மனைவி ராணியுடன் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கண் பரிசோதனை செய்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பு கொண்டிருந்தார்.

மறைமலை அடிகள் சாலையில் அந்தோணியார் கோவில் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென அப்பாவுவுக்கு மயக்கம் ஏற்பட்டது.

உடனடியாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி ராணி கணவரை ஆட்டோ மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அப்பாவு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ராணி கொடுத்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News