புதுச்சேரி

கோப்பு படம்.

அளவுக்கு அதிகமாக மது குடித்த கண்டக்டர் சாவு

Published On 2023-09-18 11:36 IST   |   Update On 2023-09-18 11:36:00 IST
  • கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்தார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி:

திருபுவனை சின்னபேட் நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன்(வயது45). இவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார்.

மது பழக்கத்துக்கு ஆளான நாகராஜன் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்தார். இதனை அவரது மனைவி முத்துலட்சுமி கண்டித்த போது அவரிடம் நாகராஜன் தகராறு செய்து விட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.

இந்த நிலையில் அளவுக்கு அதிகமாக மது குடித்த நாகராஜன் நேற்று அப்பகுதியில் உள்ள சாராயக்கடை எதிரே மயங்கி அதே இடத்தில் இறந்து போனார்.

இதுகுறித்து அவரது மனைவி முத்துலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News