புதுச்சேரி

கோப்பு படம்.

விவசாயிகளிடம் குறை கேட்பு

Published On 2023-02-28 14:54 IST   |   Update On 2023-02-28 14:54:00 IST
  • வேளாண் துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்.
  • கூட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.

புதுச்சேரி:

புதுவை விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் கரிக்கலாம்பாக்கம் தனியார் திருமண நிலையத்தில் நடைபெற்றது.

வேளாண் துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிகாந்தன், அசாக்பாபு, கலெக்டர் மணிகண்டன், துறை இயக்குனர் வசந்தகுமார், வனத்துறை அதிகாரி வஞ்சனவள்ளி, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் எழில்ராஜன், ஆறுமுகம், ஜெயக்குமார் உட்பட அனைத்து துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம், விடுபட்டவர்களுக்கு காப்பீட்டு தொகை, மழைக்கு முன்பாக ஆண்டுதோறும் ஏரி, குளம், வாய்க்கால்களை தூர் வார வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.

Tags:    

Similar News