- கம்யூனிஸ்டு கட்சி புதுவை மாநில 23-வது மாநாடு குறித்து ஆலோசனைக்கூட்டம் தட்டாஞ்சாவடி தொகுதி, புதுப்பேட்டை தியாகி ராமையா மன்றத்தில் நடந்தது.
- மாநில நிர்வாக குழு உறுப்பினர் சேதுசெல்வம் தலைமை வகித்தார்
புதுச்சேரி:
இந்திய கம்யூனிஸ்டு கட்சி புதுவை மாநில 23-வது மாநாடு குறித்து ஆலோசனைக்கூட்டம் தட்டாஞ்சாவடி தொகுதி, புதுப்பேட்டை தியாகி ராமையா மன்றத்தில் நடந்தது.
மாநில நிர்வாக குழு உறுப்பினர் சேதுசெல்வம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சலீம் மாநில குழு முடிவுகளை விளக்கி பேசினார். முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், தேசிய குழு உறுப்பினர் ராமமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், துணை செயலாளர் அபிஷேகம், நிர்வாக குழு உறுப்பினர்கள் தினேஷ்பொன்னையா, சிவா, பொருளாளர் சுப்பையா ஆகியோர் பேசினர். தொகுதி செயலாளர் முருகன் நன்றி தெரிவித்தார்.
மாநில குழு உறுப்பினர்கள் ஹேமலதா, எழிலன், தொகுதி துணை செயலாளர் செல்வம், பொருளாளர் தனஞ்செழியன் உட்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கட்சியின் 23-வது மாநில மாநாடு ஆகஸ்டு 17, 18-ந் தேதிகளில் ஜீவா ருக்மணி திருமண நிலையத்தில் நடத்துவது. ஆகஸ்டு 18-ந் தேதி ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.