புதுச்சேரி

மறியலில் ஈடுபட்டவர்களிடம் ஆணையர் ஆறுமுகம் பேச்சுவார்த்தை நடத்தும் காட்சி.

காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்-போக்குவரத்து பாதிப்பு

Published On 2023-04-07 06:33 GMT   |   Update On 2023-04-07 06:33 GMT
  • கடந்த சில நாட்களாக இங்கு சரிவர தண்ணீர் வரவில்லை என பொதுமக்கள் வில்லியனூர் கொம்யூன் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
  • சுமார் 20 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த கொம்யூன் ஆணையர் ஆறுமுகம் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

புதுச்சேரி:

வில்லியனூர் அடுத்த உருவையாறு பேட் பகுதியில் சுமார் ஆயிரம் குடியிருப்புகள் உள்ளது. இந்தப் பகுதிக்கு திருக்காஞ்சி மற்றும் உருவையாறு பகுதியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக இங்கு சரிவர தண்ணீர் வரவில்லை என பொதுமக்கள் வில்லியனூர் கொம்யூன் அலுவலகத்தில் புகார் அளித்தனர். ஆனாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை காலி குடங்களுடன் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பைபாஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் சுமார் 20 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த கொம்யூன் ஆணையர் ஆறுமுகம் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

தற்போது வீடுகளில் நேரடியாக மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். புதிய ஆழ்குழாய் கிணறு போடப்பட்டுள்ளதால் அதன் மூலமாக விரைவில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

உப்பு கலந்த குடிநீர் வருவதால் விரைவில் இந்த பகுதியில் வேளாண் துறை அமைச்சரிடம் பேசி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News