கென்னடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி.
சிமெண்டு சாலை-வாய்க்கால் அமைக்கும் பணி
- புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட வாணரப்பேட்டை பகுதியில் வாய்க்கால் மற்றும் தற்போதுள்ள சிமெண்டு சாலை மேம்படுத்தப்படுகிறது.
- மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளைச் செயலாளர் ராகேஷ் மற்றும் லாரன்ஸ், தி.மு.க.நிர்வாகிகள் ரகுமான் மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் உடன் இருந்தனர்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் தொகுதிக் குட்பட்ட வாணரப் பேட்டை நாகமுத்து மாரியம்மன் கோவில் வீதியில் புதுவை நகராட்சி மூலம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.13 லட்சத்து 40 ஆயிரம் செலவில் வாய்க்கால் மற்றும் தற்போதுள்ள சிமெண்டு சாலை மேம்படுத்தப்படுகிறது.
இதற்கான கட்டுமான பணியினை கென்னடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியின் போது நகராட்சி செயற் பொறியாளர் சிலபாலன், துணைப்பொறியாளர் பிரபாகரன், இள நிலைப்பொறியாளர் சண்முகசுந்தரம் , மற்றும் ஊர் பொதுமக்கள் சகாயராஜ், வெங்க டேஸ்வரன், கணேசன், நடேசன், சிவக்குமார், முனுசாமி, ஜான், செங்கேணி, சுமதி, தமிழ்செல்வி, வசந்தா மற்றும் தொகுதி செயலாளர் சக்திவேல், துணை செயலாளர் ஆரோக்கியராஜ், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளைச் செயலாளர் ராகேஷ் மற்றும் லாரன்ஸ், தி.மு.க.நிர்வாகிகள் ரகுமான் மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் உடன் இருந்தனர்.