புதுச்சேரி
சி.பி.எஸ்.இ. கல்வி நியமன விதிகளை திருத்தி ஆணை
- ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
- பணியிட மாற்றங்களை ஆண்டின் தொடக்கத்திலேயே கலந்தாய்வு மூலம் முடிக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை யூனியன் பிரதேச பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் துளசி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் 23-24-ம் கல்வியாண்டில் தமிழுடன் கூடிய சி.பி.எஸ்.இ. கல்விமுறை அமல்படுத்த ப்படும் என்ற அரசின் அறிவிப்பை வர வேற்கிறோம். இந்த கல்வி முறையில் அனைத்து பதிவிகள், நியமன விதிகள், ஊதிய விகிதங்கள், பணி நாட்கள் ஆணைகளை விரைவாக வெளியிட வேண்டும்.
மேல்நிலை கல்வியில் புதிய பாடப் பிரிவுகளை அமல்படுத்த வேண்டும். மொழி, விருப்ப பாடங்களை அதிகப்படுத்த வேண்டும். 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். பணியிட மாற்றங்களை ஆண்டின் தொடக்கத்திலேயே கலந்தாய்வு மூலம் முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.