புதுச்சேரி

குடற்புழு நீக்க சிகிச்சை முகாம் நடைபெற்ற காட்சி படம். 

கால்நடை குடற்புழு நீக்க சிகிச்சை முகாம்

Published On 2022-09-05 07:36 GMT   |   Update On 2022-09-05 07:36 GMT
  • புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மூலம் ஆத்மா திட்டத்தின் வாயிலாக கரையாம்புத்தூர் மற்றும் அதற்குட்பட்ட கடுவனூர் வருவாய் கிராமத்தில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க சிகிச்சை முகாம் நடைபெற்றது.
  • கால்நடை மருத்துவர் செல்லமுத்து கால்நடை–களுக்கு குடற்புழு நீக்கம் சிகிச்சை அளித்து, பால் உற்பத்தி குறித்து ஆலோசனை வழங்கினார்.

புதுச்சேரி:

புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மூலம் ஆத்மா திட்டத்தின் வாயிலாக கரையாம்புத்தூர் மற்றும் அதற்குட்பட்ட கடுவனூர் வருவாய் கிராமத்தில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க சிகிச்சை முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு வேளாண் அலுவலர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். முன்னதாக துணை வேளாண் அலுவலர் கங்காதுரை கால்நடை விவசாயிகளை வரவேற்றார்.

கால்நடை மருத்துவர் செல்லமுத்து கால்நடை–களுக்கு குடற்புழு நீக்கம் சிகிச்சை அளித்து, பால் உற்பத்தி குறித்து ஆலோசனை வழங்கினார்.முகாமில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.150-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது

முகாமில் விவசாயி–களுக்கு கறவை மாடுகளுக்கான தாது உப்பு கலவை இலவசமாக வழங்கப்பட்டது விழாவின் ஏற்பாடுகளை செயல் விளக்க உதவியாளர் பத்மநாபன் செய்திருந்தார். ஆத்மா திட்ட மேலாளர் பக்தவச்சலம் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Tags:    

Similar News