புதுச்சேரி

கோப்பு படம்

போலி சான்றிதழ் வழங்கியவர் மீது வழக்கு

Published On 2022-06-14 04:44 GMT   |   Update On 2022-06-14 04:44 GMT
  • அரசு முத்திரையை பயன்படுத்தி போலி சான்றிதழ் வழங்கியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
  • இந்த நிலையில் பயனாளிகளுக்கு ரமேஷ் போலி சான்றிதழ் வழங்கப்பட்டதை ஆதாரத்துடன் அங்காளன் எம்.எல்.ஏ. திருபுவனை போலீசில் புகார் செய்தார்.

புதுச்சேரி:

அரசு முத்திரையை பயன்படுத்தி போலி சான்றிதழ் வழங்கியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருபுவனை தொகுதியில் முதியோர், விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் ஆகியோருக்கு உதவித்தொகை பெறும் விண்ணப்பத்தில் குடியிருப்பு மற்றும் வருமான சான்றிதழ்கள் அரசு முத்திரையை பயன்படுத்தி பயனாளிகளிடம் பணத்தை பெற்றுக்கொண்டு கலிதீர்த்தாள்குப்பம் மேயர் தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவர் போலியாக தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் அளிக்கும் சான்றிதழ்களை வழங்குவதாக ஏற்கனவே தொகுதி எம்.எல்.ஏ.வான அங்காளன் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் பயனாளிகளுக்கு ரமேஷ் போலி சான்றிதழ் வழங்கப்பட்டதை ஆதாரத்துடன் அங்காளன் எம்.எல்.ஏ. திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீசார் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News