புதுச்சேரி

கோப்பு படம்

தொழிலதிபர் விபத்தில் இறந்தார்

Published On 2022-07-05 14:41 IST   |   Update On 2022-07-05 14:41:00 IST
  • ரெட்டியார் பாளையத்தில் சாலை தடுப்பு கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலதிபர் பலியானார்
  • இவர் வெளிநாட்டில் வேலை செய்து விட்டு தற்போது வீட்டில் இருந்து வருகிறார்.

புதுச்சேரி:

ரெட்டியார் பாளையத்தில் சாலை தடுப்பு கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலதிபர் பலியானார்.

வில்லியனூர் அருகே திருக்காஞ்சியை அடுத்த கீழ்அக்ரகாரம் பி.கே.வி. நகரை சேர்ந்தவர் தமிழரசன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து விட்டு தற்போது வீட்டில் இருந்து வருகிறார். இவரது மகன் தமிழ்செல்வன்(வயது41). இவர் பங்கூர் பகுதியில் எந்திரங்களுக்கு கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மகாலட்சுமி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளன.

இந்த நிலையில் தமிழ்செல்வனின் நண்பர் பிரான்சில் இருந்து புதுவை வந்திருந்தார். இதையடுத்து நண்பரின் அழைப்பை ஏற்று தமிழ்செல்வன் நண்பரை பார்க்க மோட்டார் சைக்கிளில் புதுவை வந்தார். பின்னர் நண்பரை சந்தித்து பேசி விட்டு வீட்டுக்கு புறப்பட்டு வந்தார்.

ரெட்டியார் பாளை யத்தில் ஒரு தனியார் டிராவல்ஸ் நிறுவனம் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு கட்டையில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தமிழ்செல்வன் தலை மற்றும் உடல் முழுவதும் பலத்த காயமடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக் காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்தி ரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தமிழ்செல்வம் பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து அவரது தந்தை தமிழரசன் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News