புதுச்சேரி
பா.ஜனதா ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
- சுதந்திர போராட்ட தியாகிகளை இழிவுபடுத்தி வரும் லெட்டர் பேடு அமைப்புகளை தடை செய்ய வலியுறுத்தி பா.ஜனதா சார்பில் ராஜா தியேட்ட அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
சுதந்திர போராட்ட தியாகிகளை இழிவுபடுத்தி வரும் லெட்டர் பேடு அமைப்புகளை தடை செய்ய வலியுறுத்தி பா.ஜனதா சார்பில் ராஜா தியேட்ட அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார்.
இந்து முன்னணி தலைவர் சனில் குமார், செயலாளர் முருகையன், எம்.எல்.ஏ.க்கள் வி.பி.ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு, சிவசங்கரன் பா.ஜனதா மாநில துணைத்தலைவர்கள் தங்க விக்ரமன், ரவிச்சந்திரன், மாநில செயலாளர்கள் நாகராஜ், ரத்தினவேல், லதா, ஜெயந்தி, மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் கனகவல்லி, உழவர் கரை மாவட்ட மகளிர் அணி தலைவி வள்ளி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.