புதுச்சேரி

மத்திய அரசின் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட பரத கலை மாணவி பூங்குழலிக்கு அசோக்பாபு எம்.எல்.ஏ. சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த காட்சி.

பரதகலை மாணவி தேர்வு

Published On 2022-11-26 06:00 GMT   |   Update On 2022-11-26 06:00 GMT
  • புதுவை முதலியார்பேட்டை தொகுதிகுட்பட்ட நைனார்மண்டபம் சுதானாநகரை சேர்ந்தவர் மாணிக்க வாசகம். இவரது மகள் பூங்குழலி. மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியான இவர் பரத கலையில் ஆர்வம் கொண்டு பயிற்சி பெற்று வந்தார்.
  • பரதகலை மாணவி பூங்குழலிக்கு அசோக்பாபு எம்.எல்.ஏ. சால்வை அணிவித்து வாழ்த்தினார்.

புதுச்சேரி:

புதுவை முதலியார்பேட்டை தொகுதிகுட்பட்ட நைனார்மண்டபம் சுதானாநகரை சேர்ந்தவர் மாணிக்க வாசகம். இவரது மகள் பூங்குழலி. மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியான இவர் பரத கலையில் ஆர்வம் கொண்டு பயிற்சி பெற்று வந்தார்.

இந்தநிலையில் பரத கலையில் தனிநபர் திறமையில் மாற்றுத்திறனாளி களுக்கான மத்திய அரசின் தேசிய விருதுக்கு பூங்குழலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து பூங்குழலி தனது பெற்றோருடன் அசோக்பாபு எம்.எல்.ஏ.வை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பரதகலை மாணவி பூங்குழலிக்கு அசோக்பாபு எம்.எல்.ஏ. சால்வை அணிவித்து வாழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியின் போது முத்தமிழன், பா.ஜனதா நகர மாவட்ட துணை தலைவர் குமார், விஜயரங்கம், மாவட்ட விவசாய அணி தலைவர் அய்யனாரப்பன், கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News