புதுச்சேரி

அய்யா வைகுண்டரின் 191-வது அவதார தின விழா நடைபெற்ற காட்சி.

அய்யா வைகுண்டர் அவதார தின விழா

Published On 2023-03-05 05:15 GMT   |   Update On 2023-03-05 05:15 GMT
  • அரங்கனூர் எரமுடி அய்யனார் கோவில் அருகில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் புதுவைப்பதியில் நடந்தது.
  • புதுக்குப்பம் கடற்கரையில் இருந்து கடல் பதம் எடுத்து வரப்பட்டது.

புதுச்சேரி:

அய்யா வைகுண்டரின் 191-வது அவதார தின விழா புதுவை மாநிலத்தில் முதல்முறையாக பாகூரை அடுத்த அரங்கனூர் எரமுடி அய்யனார் கோவில் அருகில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் புதுவைப்பதியில் நடந்தது.

முன்னதாக காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பால் வைத்தல், அதைத்தொடர்ந்து புதுக்குப்பம் கடற்கரையில் இருந்து கடல் பதம் எடுத்து வரப்பட்டது. 8 மணிக்கு உகப்படிப்பு, பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பகல் 1 மணிக்கு அன்னதர்மம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு அய்யாவுக்கு பால் வைத்தல், மாலை 5 மணிக்கு உகப்படிப்பு, 5.30 மணிக்கு இனிமம் (பிரசாதம்) வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை புதுவை, கடலூர் மற்றும் திண் டிவனம் பகுதி அய்யாவழி அன்புகொடி மக்கள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News