பாகூரில் முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு பேரணி நடந்ததை படத்தில் காணலாம்.
- முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- பாகூர் சிவன் கோயில் அருகில் இருந்து புறப்பட்ட விழிப்புணர்வு பேரணிக்கு, ஹெல்ப் ஏஜ் இந்தியா ஒருங்கிணைப்பாளர் தயாநிதி வரவேற்றார்.
புதுச்சேரி:
பாகூரில் ஹெல்ப் ஏஜ் இந்தியா சார்பில் உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பாகூர் சிவன் கோயில் அருகில் இருந்து புறப்பட்ட விழிப்புணர்வு பேரணிக்கு, ஹெல்ப் ஏஜ் இந்தியா ஒருங்கிணைப்பாளர் தயாநிதி வரவேற்றார்.
துணை இயக்குனர் சத்திய பாபு முதியோர்களுக்காக ஹெல்ப் ஏஜ் இந்தியா செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து முதியோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.
பேரணியை சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் தொடங்கி வைத்து, சிறப்புரையாற்றினார்.
மாட வீதிகள் வழியாக வன்கொடுமைக்கு எதிரான வாசகம் எழுதிய பதாகைகளை ஏந்தி முதியோர்கள் பேரணியாக சென்றனர்
இதற்கான ஏற்பாடுகளை புதுவை முதியோர் நல கூட்டமைப்பைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் பீட்டர், மகேஸ்வரி, பிரசாந்த், ரவி, தமிழ்வேந்தன் ஆகியோர் செய்தனர்.