புதுச்சேரி

நாடக கலைஞர்களுக்கு விருதுகளை தமிழக அரசு கொறடா கோவி.செழியன் வழங்கிய காட்சி.

நாடக கலைஞர்கள்-குறும்பட இயக்குனர்களுக்கு விருது

Published On 2022-08-16 08:54 GMT   |   Update On 2022-08-16 08:54 GMT
  • குறும்பட மற்றும் நாடக விழா புதுவை ஆந்திர மகா சபையில் நடந்தது.
  • புதுவை மாநில தி.மு.க அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

புதுச்சேரி:

புதுவை கண்மணி கிரியேஷன் சார்பில் 44-ம் ஆண்டு விழா குறும்பட மற்றும் நாடக விழா புதுவை ஆந்திர மகா சபையில் நடந்தது.

விழாவில் திருச்சி, சேலம், கோவை, நாமக்கல், ஈரோடு, தஞ்சாவூர், மதுரை, சென்னை மற்றும் புதுவையைச் சேர்ந்த பல்வேறு நாடக குழுக்களும், குறும்பட இயக்குனர்களும் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். புதுவை மாநில தி.மு.க அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

தமிழக அரசு கொறடா கோவி.செழியன் 45 கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார். விழாவில் மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20-ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள், அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கென்னடி, சம்பத், செந்தில்குமார், என்.ஆர்.காங்., பொது செயலாளர் என்.எஸ்.ஜே. ஜெயபால், தி.மு.க. உருளையன்பேட்டை தொகுதி பொறுப்பாளர் கோபால், புதுவை தமிழ்ச்சங்க தலைவர் முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை புதுவை கண்மணி கிரியேஷன் தலைவர் எம்.எஸ்.ராஜா செய்திருந்தார்.

Tags:    

Similar News