பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கிய காட்சி.
அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு விழா-அங்காளன் எம்.எல்.ஏ. வழங்கினார்
- மாணவ-மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பரிசுகளை திருபுவனை தொகுதியின் எம்.எல்.ஏ அங்காளன் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் வழங்கி சிறப்புரையாற்றினார்.
- இந்நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் எம்.எல்.ஏ. வின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
திருபுவனை தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளான திருபுவனை, மதகடிப்பட்டு பாளையம், சோரப்பட்டு, செல்லிப்பட்டு கொத்தம்புரிநத்தம் ,திருவண்டார் கோவில், கலித்தீர்த்தாள் குப்பம் ஆகிய அரசு பள்ளிகளில் பயின்று வெற்றி பெற்ற 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பரிசுகளை திருபுவனை தொகுதியின் எம்.எல்.ஏ அங்காளன் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் வழங்கி சிறப்புரையாற்றினார்.
மேலும் சிறப்பாக கல்வி கற்கும் மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் இதே போன்று விழா நடத்தப்பட்டு மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கவுரவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் எம்.எல்.ஏ. வின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.