புதுச்சேரி

கோப்பு படம்

கோவில் காவலாளி மீது தாக்குதல்

Published On 2022-06-21 13:46 IST   |   Update On 2022-06-21 13:46:00 IST
  • நெட்டப்பாக்கம் அருகே கோவில் கோபுர கலசத்தில் ஏறி போட்டோ எடுத்ததை காவலாளி போலீசில் புகார் தெரிவித்ததால் அவரை வாலிபர் தாக்கினார்.
  • நெட்டப்பாக்கம் அருகே பண்டசோழ நல்லூர் குளத்து மேட்டுத் தெருவை சேர்ந்தவர் முருகன்

புதுச்சேரி:

நெட்டப்பாக்கம் அருகே கோவில் கோபுர கலசத்தில் ஏறி போட்டோ எடுத்ததை காவலாளி போலீசில் புகார் தெரிவித்ததால் அவரை வாலிபர் தாக்கினார். நெட்டப்பாக்கம் அருகே பண்டசோழ நல்லூர் குளத்து மேட்டுத் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது45). இவருக்கு பேபி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

முருகன் அங்குள்ள முத்தாலம்மன் கோவிலில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 17-ந் தேதி இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடை பெற்றது. முருகன் கோவிலில் காவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது நள்ளிரவு அதே பகுதியை சேர்ந்த ஆதித்தியன்(22), மணிகண்டன் (23) மற்றும் பனையடிக்குப்பத்தை சேர்ந்த சூர்யா(42) ஆகியோர் கோவில் கோபுரத்தில் ஏறி கலசம் அருகே நின்று போட்டோ எடுத்தனர்.

இதனை முருகன் நெட்டப்பாக்கம் போலீசில் புகார் தெரிவித்ததால் போலீசார் விரைந்து வந்து 3 வாலிபர்களையும் பிடித்து சென்று பின்னர் விசாரணை நடத்தி அனுப்பி வைத்து விட்டனர்.

இந்த நிலையில் முருகன் கோவிலில் இருந்தார். அப்போது ஆதித்தியன் என்னையும் எனது நண்பர்களையும் போலீசில் ஏன் புகார் செய்தாய் எனக்கூறி முருகனை மரக்கட்டையால் தாக்கினார்.

மேலும் என்னிடம் வைத்துக்கொண்டால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று ஆதித்தியன் மிரட்டி விட்டு சென்றார். இந்த தாக்குதலில் தலை, முதுகு, கை, கால்கள்களில் பலத்த காயமடைந்த முருகனை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து முருகனின் மனைவி பேபி நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆதித்தியனை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News