புதுச்சேரி
வீடு தீப்பற்றி எரிந்து சேதமாகி கிடப்பதை படத்தில் காணலாம்.
தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து சேதம்
- பூரணாங்குப்பத்தில் திடீர் தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து சேதமானது.
- புதுவை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
புதுச்சேரி:
பூரணாங்குப்பத்தில் திடீர் தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து சேதமானது. தவளக்குப்பம் அருகில் பூரணாங்குப்பம் தெற்கு வீதியை சேர்ந்தவர் ஆனந்த். இவரது உறவினர் மூதாட்டி தனம் (வயது 70). இவர் வீட்டு மொட்டை மாடியில் ஒரு குடிசை கட்டி தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு வீடு முற்றிலும் எரிந்து பொருட்கள் அனைத்தும் சேதமானது. அதிர்ஷ்டவசமாக மூதாட்டி தனம் உயிர்தப்பினார்.
இது சம்பந்தமாக தகவல் அறிந்தவுடன் புதுவை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். விபத்து குறித்து தவளக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.