புதுச்சேரி

கோப்புபடம்

113 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2022-07-31 06:48 GMT   |   Update On 2022-07-31 06:48 GMT
  • புதுவையில் ஆயிரத்து 429 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
  • புதுவையில் 84, காரைக்காலில் 19, ஏனாமில் 10 பேர் என புதிதாக 113 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுச்சேரி:

புதுவையில் ஆயிரத்து 429 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் புதுவையில் 84, காரைக்காலில் 19, ஏனாமில் 10 பேர் என புதிதாக 113 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 12, காரைக்காலில் 3, மாகியில் ஒருவர் என 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுவையில் 631, காரைக்காலில் 126, ஏனாமில் 38, மாகியில் 2 பேர் என 797 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.

புதுவையில் 121, காரைக்காலில் 4 பேர் என 125 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். மாநிலத்தில் கொரோனா வுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 965 ஆக உள்ளது. புதுவையில் 2வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 18 லட்சத்து 39 ஆயிரத்து 305 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News