வழிபாடு
புத்தாண்டையொட்டி அக்னிதீர்த்த கடலில் நீராட பக்தர்களுக்கு தடை
நாளை 2022-ம் ஆண்டு புது வருடம் பிறப்பதை ஒட்டி உலகப் புகழ்பெற்ற தனுஷ்கோடி பகுதிக்கு பக்தர்கள், சுற்றுலா பயணிகள் செல்ல கலெக்டர் சங்கர்லால் குமாவத் தடை விதித்து உத்தரவிட்டார்.
கொரோனா தொற்று நோய் பரவலை தடுப்பதற்காக நாளை 2022-ம் ஆண்டு புது வருடம் பிறப்பதை ஒட்டி ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதிகளுக்கு பக்தர்களும், சுற்றுலாபயணிகளும் அதிக அளவில் வருகை தருவார்கள்.
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் -தமிழக அரசு உத்தரவின்படி காசிக்கு நிகராக புனிதமாக கருதப்படும் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று உலகப் புகழ்பெற்ற தனுஷ்கோடி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் கலெக்டர் சங்கர்லால் குமாவத் தடை விதித்து உத்தரவிட்டார்.
தனுஷ்கோடி பகுதிக்கு இன்று முதல் வாகனங்கள் செல்லவும், சுற்றுலா பயணிகள்-பக்தர்கள் செல்லவும் போலீசார் புதுரோடு பகுதியில் பேரிகாடு அமைத்து அவர்களை திருப்பி அனுப்பினர்.
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் -தமிழக அரசு உத்தரவின்படி காசிக்கு நிகராக புனிதமாக கருதப்படும் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று உலகப் புகழ்பெற்ற தனுஷ்கோடி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் கலெக்டர் சங்கர்லால் குமாவத் தடை விதித்து உத்தரவிட்டார்.
தனுஷ்கோடி பகுதிக்கு இன்று முதல் வாகனங்கள் செல்லவும், சுற்றுலா பயணிகள்-பக்தர்கள் செல்லவும் போலீசார் புதுரோடு பகுதியில் பேரிகாடு அமைத்து அவர்களை திருப்பி அனுப்பினர்.