செய்திகள்
சாமி தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்கள்

கோவில்களில் இரவு 8 மணிவரை மட்டுமே அனுமதி: பாரபட்சமாக நடப்பதாக பக்தர்கள் அதிருப்தி

Published On 2021-04-12 12:49 IST   |   Update On 2021-04-12 12:49:00 IST
அனைத்து கோவில்களிலும் கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களையும் சமூக இடைவெளியுடன் கோவிலுக்குள் குறிப்பிட்ட நேரத்துக்குள் அனுமதிப்பதில் கோவில் நிர்வாகிகள் திணறுகின்றனர்.

சென்னை, ஏப்.12-

கொரோனா பரவல் காரணமாக புதிய கட்டுப் பாட்டு விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதில் கோவில்களில் இரவு 8 மணிக்கு பிறகு தரிசனத் துக்கு அனுமதிக்க கூடாது என்று உத்தரவிடப்பட் டுள்ளது.

அதன்படி அனைத்து கோவில்களும் இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படு கிறது. பழனி, ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், திருத்தணி, திருச் செந்தூர், திருப்பரங்குன்றம், மதுரை மீனாட்சியம்மன் கோவில் தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில், சமயபுரம், சென் னையில் பார்த்தசாரதி, வட பழனி, மாங்காடு, திருவேற் காடு, கபாலீசுவரர் கோவில் போன்ற பக்தர்கள் அதிக மாக வரும் அனைத்து கோவில்களிலும் கோவி லுக்கு வரும் அனைத்து பக்தர்களையும் சமூக இடைவெளியுடன் கோவிலுக்குள் குறிப்பிட்ட நேரத்துக்குள் அனுமதிப்பதில் கோவில் நிர்வாகிகள் திணறுகின்றனர்.

பலர் இலவச தரிசனங் களை தவிர்த்து கட்டண தரிசன பாதையில் செல்வ தால் அங்கும் கூட்டம் அலை மோதுகிறது. இதை பயன் படுத்தி சில இடங்களில் கையூட்டு பெற்றுக்கொண்டு நேரடியாக அனுமதித்து பாரபட்சமாக நடப்பதாக பக்தர்கள் அதிருப்தி தெரிவிக்கிறார்கள்.

Similar News