செய்திகள்
திருவள்ளூரில் வீரராகவ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தை மாத பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 6-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தை மாத பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து காலை தங்க சப்பரத்தில் உற்சவர் வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்று இரவு 7 மணிக்கு சிம்ம வாகனத்தில் உற்சவர் வீரராகவர் வீதி உலா வருகிறார். வருகிற 2-ந் தேதி கருட சேவையும், 4-ம் தேதி தை அமாவாசையையொட்டி காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை உற்சவர் வீரராகவர் ரத்னாங்கி சேவையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 6-ந் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
இன்று இரவு 7 மணிக்கு சிம்ம வாகனத்தில் உற்சவர் வீரராகவர் வீதி உலா வருகிறார். வருகிற 2-ந் தேதி கருட சேவையும், 4-ம் தேதி தை அமாவாசையையொட்டி காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை உற்சவர் வீரராகவர் ரத்னாங்கி சேவையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 6-ந் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.