செய்திகள்

அக்னீஸ்வரசுவாமி கோவிலில் துர்க்கை அம்மனுக்கு மகாசண்டி ஹோமம்

Published On 2018-07-21 09:29 GMT   |   Update On 2018-07-21 09:29 GMT
திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அக்னீஸ்வரசாமி கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையொட்டி மகா சண்டிஹோமம் நடந்தது.
திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அக்னீஸ்வரசாமி கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையொட்டி மகா சண்டிஹோமம் நடந்தது. 29-வது ஆண்டாக கணபதி ஹோமத்துடன் தொடங்கிய இந்த யாகத்தில் கன்யாபூஜை, சுகாசினி பூஜை, வடுக பூஜை, கோபூஜை ஆகியவை நடைபெற்றன.

யாக குண்டத்தில் பக்தர்கள் கொடுத்த பழங்கள், தேங்காய்கள், வஸ்திரங்கள் போடப்பட்டு வேதமந்திரங்கள் முழங்கிட யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்து சென்று துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

சிறப்பு அபிஷேகத்திற்கு பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அனை வருக்கும் அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
Tags:    

Similar News