செய்திகள்
திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆயில்ய ஹோமம்
நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்த கடேஸ்வரரர் கோவிலில் ஆயில்ய ஹோமம் நடைபெற்றது.
நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்த கடேஸ்வரரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் அபிராமி பட்டருக்கு அம்மன் அருள்புரிந்து அமாவாசை நாளில் முழுநிலவை தோன்ற செய்த திருவிளையாடல், எமனிடம் இருந்து உயிரை காப்பாற்றி கொள்ள மார்க்கண்டேயர் சிவனை சரண் அடைந்து என்றும் 16 வயது வரம் பெற்ற திருவிளையாடல் உள்பட பல அற்புத நிகழ்ச்சிகள் நடந்துள்ளது. இக்கோவிலில் 60-ம் கல்யாணம், 80 வயது பூர்த்தி சிறப்பு வழிபாடு செய்தால் ஆயுள் பலம் கிடைக்கும் என்பதால் உலகம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வழிபாடு நடத்தி செல்வார்கள்.
இக்கோவிலுக்கு புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி இன்று காலை வந்தார். அவர் வருகையையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட ஆயில்ய ஹோமம் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். முன்னதாக அவர் அனைத்து சாமி சன்னதிகளுக்கும் சென்று வழிபட்டார். அவருடன் பாதுகாப்பு அதிகாரிகளும் வந்துள்ளனர்.
இதுபற்றிய தகவல் பரவியதும் பக்தர்கள் நாராயணசாமி ஆயில்ய ஹோமம் செய்த இடத்துக்கு சென்று அவரை பார்த்து சென்றனர். அவருக்கு கோவில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்து பிரசாதங்கள் வழங்கினர். அவரது வருகையையொட்டி காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் திருக்கடையூர் கோவிலுக்கு வந்திருந்தனர்.
இக்கோவிலுக்கு புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி இன்று காலை வந்தார். அவர் வருகையையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட ஆயில்ய ஹோமம் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். முன்னதாக அவர் அனைத்து சாமி சன்னதிகளுக்கும் சென்று வழிபட்டார். அவருடன் பாதுகாப்பு அதிகாரிகளும் வந்துள்ளனர்.
இதுபற்றிய தகவல் பரவியதும் பக்தர்கள் நாராயணசாமி ஆயில்ய ஹோமம் செய்த இடத்துக்கு சென்று அவரை பார்த்து சென்றனர். அவருக்கு கோவில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்து பிரசாதங்கள் வழங்கினர். அவரது வருகையையொட்டி காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் திருக்கடையூர் கோவிலுக்கு வந்திருந்தனர்.