செய்திகள்
முள்படுக்கையில் படுத்து அருள்வாக்கு கூறும் நாகராணி.

திருப்புவனம் அருகே முள் படுக்கையில் படுத்து அருள்வாக்கு கூறிய பெண் சாமியார்

Published On 2017-01-03 15:52 IST   |   Update On 2017-01-03 15:52:00 IST
திருப்புவனம் அருகே முள் படுக்கையில் படுத்து பெண் சாமியார் அருள்வாக்கு கூறினார்.
திருப்புவனம்:

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பாப்பாங்குளம் முத்துமாரியம்மன் - மாசாணியம்மன் கோவிலை சாமியார் நாகராணி, பூசாரி மாரிமுத்து ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் நாகராணி முள் படுக்கையில் அருள்வாக்கு கூறுவது வழக்கம். இந்த ஆண்டில் கடந்த கார்த்திகை 1-ந் தேதி அவர், காப்பு கட்டி விரதம் தொடங்கினார்.

48-வது நாளான நேற்று கோவில் வாசலில் கருவேல முள் உள்பட பல்வேறு முட்களால் 8 அடி உயரம், 10 அடி அகலத்துக்கு படுக்கை அமைக்கப்பட்டது. கோவிலில் சிறப்பு பூஜைக்கு பின்னர், அருள் வந்து ஆடிய பெண் சாமியார் முள் படுக்கையில் 3 மணி நேரம் படுத்து தவம் செய்தார். பின்னர் முள் படுக்கையில் ஏறி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.

Similar News