செய்திகள்

கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் வெள்ளி தேரோட்டம் இன்று மாலை நடக்கிறது

Published On 2016-05-21 13:52 IST   |   Update On 2016-05-21 13:52:00 IST
நாட்டரசன் கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் வெள்ளி தேரோட்டம் இன்று மாலை நடக்கிறது

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன் கோட்டையில் பிரசித்தி பெற்ற கண்ணு டைய நாயகி அம்மன் கோவி லில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக திருவிழா விமரிசையாக நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டுக் கான விழா கடந்த 13–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்கிய நாளில் இருந்தே தினமும் காலை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. விழாவின் நேற்று தங்க தேரோட்டம் நடந்தது.

முக்கிய நிகழ்ச்சியான வெள்ளி தேரோட்டம் இன்று இரவு 7 மணியள வில் நடக்கிறது. முன்ன தாக அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப் பட்டு சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருள் வார். பின்னர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக மாவட் டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்வார்கள். இதற்காக மாவட்ட நிர்வாகமும் சிறப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளது. பக்தர்களின் வசதிக் காக கூடுதல் பஸ் வசதியும் செய்யப்பட்டு உள்ளது.

Similar News