செய்திகள்

தேவகோட்டை அருகே விஸ்வநாதர் சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம்

Published On 2016-05-21 13:36 IST   |   Update On 2016-05-21 13:36:00 IST
தேவகோட்டை அருகே ஏழுவங்கோட்டை விஸ்வ நாதர் சுவாமி கோவில் வைகாசி திருவிழாவின் தேரோட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஏழுவங் கோட்டை கிராமத்தில் ஸ்ரீ விஸ்வநாதர் சுவாமி மற்றும் அகிலாண்டேஸ்வரி அம்மாள் கோவிலில் வைகாசி திருவிழா கொடி யேற்றத்துடன் காப்பு கட்டு தல் நிகழ்ச்சியுடன் தொடங் கியது.

ஒவ்வொரு நாளும் ரிஷபம் வாகனம், பூத வாகனம், யானை வாகனம், கைலாய வாகனம், குதிரை வாக னம் ஆகியவற்றில் சுவாமியை கிராம மக்கள் சுமந்து கோவிலை சுற்றி வீதிகளில் வலம் வந்தனர்.

தினமும் சிறப்பு அபிஷேக மும், தீபாராதனையும் நடை பெற்று. ஓன்பதாம் நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. ஏழுவங்கோட்டை, பெரியகாரை, தெண்ணீர் வயல், மருத்தானி, ஈகரை, கோட்டவயல், கல்லங்குடி, கள்ளிக்குடி, நடுவிக்கோட்டை மற்றும் 50–க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுமார் 5000–க்கும் மேற்பட்டேர் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

Similar News