செய்திகள்
காயத்தால் இங்கிலாந்து தொடக்க பேட்ஸ்மேன் ஜேசன் ராய் அவதி: உலகக்கோப்பை கனவு?
காயத்தால் அவதிப்பட்டு வரும் இங்கிலாந்து அணியின் தொடக்க பேட்ஸ்மேன் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஜேசன் ராய். இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக பீல்டிங் செய்யும்போது தொடைப்பகுதியில் (Hamstring) காயம் ஏற்பட்டது. இதனால் 8-வது ஓவரில் வெளியேறிய ராய் அதன்பின் பீல்டிங் செய்வதற்கும், பேட்டிங் செய்வதற்கும் வரவில்லை.
அவருக்கு நேற்றுமுன்தினம் எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தொடைப்பகுதியில் தசைநார் கிழிந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் நாளை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும், வெள்ளிக்கிழமை நடைபெறும் இலங்கைக்கு எதிரான ஆட்டத்திலும் விளையாட மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை காயத்தின் தன்மை கிரோடு-1 ஆக இருந்தால் பிரச்சனை இல்லை. 2 அல்லது அதற்கு மேல் இருந்தால் நீண்ட நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டியிருக்கும். ஜேசன் ராய்க்குப் பதிலாக ஜேம்ஸ் வின்ஸ் அல்லது மொயீன் அலி ஆகியோரின் ஒருவர் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.
அவருக்கு நேற்றுமுன்தினம் எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தொடைப்பகுதியில் தசைநார் கிழிந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் நாளை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும், வெள்ளிக்கிழமை நடைபெறும் இலங்கைக்கு எதிரான ஆட்டத்திலும் விளையாட மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை காயத்தின் தன்மை கிரோடு-1 ஆக இருந்தால் பிரச்சனை இல்லை. 2 அல்லது அதற்கு மேல் இருந்தால் நீண்ட நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டியிருக்கும். ஜேசன் ராய்க்குப் பதிலாக ஜேம்ஸ் வின்ஸ் அல்லது மொயீன் அலி ஆகியோரின் ஒருவர் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.