செய்திகள்

இதைவிட பெரியதாக ஏதும் கேட்க முடியாது: 57 ரன்கள் அடித்த லோகேஷ் ராகுல் பூரிப்பு

Published On 2019-06-17 11:28 GMT   |   Update On 2019-06-17 11:28 GMT
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அரைசதம் அடித்த லோகேஷ் ராகுல் பூரிப்படைந்துள்ளார்.
மான்செஸ்டரில் நேற்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களம் இறங்கிய லோகேஷ் ராகுல் சிறப்பாக விளையாடி 78 பந்தில் 57 ரன்கள் சேர்த்தார். ரோகித் சர்மாவுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 23.5 ஓவரில் 136 சேர்த்தார். இந்தியாவின் ரன்குவிப்புக்கு இவர்கள் ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

நேற்றைய போட்டியில் அரைசதம் அடித்த லோகேஷ் ராகுல் கூறுகையில் ‘‘பாகிஸ்தானுக்கு எதிராக என்னுடைய முதல் சர்வதேச போட்டி இதுவாகும். அற்புதமான முதல் வாய்ப்பு எனக்கு உலகக்கோப்பையில் கிடைத்துள்ளது. ஆகவே, அணி வீரர்கள் உங்களுக்கு நம்பிக்கை அளித்து வாய்ப்பு கிடைத்து நாட்டிற்காக சிறப்பாக விளையாடும்போது இதைவிட பெரியதாக ஏதும் கேட்க முடியாது’’ என்றார்.
Tags:    

Similar News