செய்திகள்

இந்திய அணியின் வெற்றிக்கு காரணம் ஐபிஎல் தான்- ஷாகித் அப்ரிடி கருத்து

Published On 2019-06-17 10:26 GMT   |   Update On 2019-06-17 10:26 GMT
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு ஐபிஎல் தான் காரணம் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி கூறியுள்ளார்.

உலகக்கோப்பைத் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின இப்போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய அணி  89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற சாதனையை இந்தியா தக்கவைத்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 7வது முறையாக உலகக்கோப்பைப் போட்டிகளில் பாகிஸ்தானை வென்றுள்ளது இந்திய அணி.

இந்நிலையில் பாகிஸ்தான்  அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி இந்த வெற்றி குறித்து கூறுகையில், ‘இந்தியாவில் கிரிக்கெட் விளையாடும் திறன் அதிகமாகியுள்ளது. தகுதியான வெற்றியைப் பெற்றுள்ள பிசிசிஐக்கு வாழ்த்துக்கள். இந்த வெற்றிக்கான முக்கிய காரணம் ஐபிஎல் தான்.   ஐபிஎல் இளம் வீரர்களைக் கண்டறிவதோடு நெருக்கடியான நேரத்தில் சிறப்பாக விளையாடவும் கற்றுக்கொடுத்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News