உலகம்

கோப்பு படம்

உக்ரைனில் மக்கள் சென்ற வாகனங்களை குறிவைத்து ரஷியா தாக்குதல்- 23 பேர் பலி

Published On 2022-09-30 07:47 GMT   |   Update On 2022-09-30 07:47 GMT
  • மக்கள் சென்ற வாகனங்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆளுநர் கூறி உள்ளார்.
  • தாக்குதலில் சிக்கிய வாகனங்கள் தீப்பற்றி எரியும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது

கீவ்:

உக்ரைனின் ஜபோரிஜியா நகரில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதல்களில் 23 பேர் கொல்லப்பட்டனர். 28 பேர் காயமடைந்துள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பை ஜபோரிஜியா பிராந்திய ஆளுநர் ஸ்டாருக் ஆன்லைன் வாயிலாக வெளியிட்டுள்ளார். ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை நோக்கி மக்கள் சென்ற வாகனங்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறி உள்ளார்.

இது தொடர்பாக அவர் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். தாக்குதலில் சிக்கிய வாகனங்கள் தீப்பற்றி எரிவதையும், சாலையில் உடல்கள் கிடப்பதையும் அந்த படங்களில் காண முடிகிறது.

இதுதொடர்பாக ரஷியா தரப்பில் உடனடியாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

Tags:    

Similar News