உலகம்

லிவர்பூல் வெற்றி பேரணியில் கார் புகுந்து விபத்து: பிரிட்டன் பிரதமர் கண்டனம்

Published On 2025-05-27 23:19 IST   |   Update On 2025-05-27 23:20:00 IST
  • இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் பிரீமியர் லீக் வெற்றி கொண்டாட்டம் நடந்தது.
  • ரசிகர்கள் கூட்டத்திற்குள் ஒரு கார் வேகமாகப் புகுந்ததில் பலர் காயம் அடைந்தனர்.

லண்டன்:

இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நேற்று பிரீமியர் லீக் வெற்றி கொண்டாட்டம் நடந்தது. அப்போது ரசிகர்கள் கூட்டத்திற்குள் ஒரு கார் வேகமாகப் புகுந்தது.

இதில் காயமடைந்தவர்களில் 27 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒரு குழந்தை மற்றும் ஒரு முதியவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறிய காயங்களுடன் மேலும் 20 பேருக்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டது. லிவர்பூல் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பிரிட்டன் பிரதமர் ஸ்டாமர் கண்டனம் தெரிவித்தார்.

இதுகுறித்து பிரதமர் கெய்ர் ஸ்டாமர் வெளியிட்டுள்ள செய்தியில், லிவர்பூலில் நடந்த தாக்குதல் மிகவும் கொடூரமானது. காயம் அடைந்தவர்கள் அனைவருக்கும் ஆதரவாக இருப்போம். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்திற்கு விரைவாகவும், தொடர்ந்தும் செயல்பட்ட போலீசார் அவசர சேவைகளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். போலீசார் விரிவான விசாரணை நடத்தவேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News