உலகம்

இலங்கையில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்- 58 பேர் கைது

Published On 2023-02-24 07:45 GMT   |   Update On 2023-02-24 07:45 GMT
  • இலங்கையில் கால வரையின்றி மூடப்பட்ட பல்கலைக்கழகத்தை திறக்ககோரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
  • போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 58 மாணவர்களை குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.

கொழும்பு:

இலங்கையில் கால வரையின்றி மூடப்பட்ட பல்கலைக்கழகத்தை திறக்ககோரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.அவர்கள் ஒன்று திரண்டு கொழும்பில் உள்ள கல்வி அமைச்சக அலுவலகத்திற்குள் புகுந்தனர்.

அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தடுக்க முயன்றனர். ஆனால் அதையும் மீறி மாணவர்கள் உள்ளே நுழைந்து போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் மூடிக்கிடக்கும் பல்கலைக்கழகத்தை உடனடியாக திறக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது .

இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 58 மாணவர்களை குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.

Tags:    

Similar News