உலகம்

2024-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டி

Published On 2022-11-16 06:29 GMT   |   Update On 2022-11-16 06:29 GMT
  • டிரம்ப் அதிபர் தேர்தலில் 3-வது முறையாக போட்டியிட உள்ளார்.
  • கடந்த தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப் ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தார்.

வாஷிங்டன்:

அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப், தற்போதைய ஜோ பைடன் அரசு நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இதற்கிடையே 2024-ம் ஆண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டியிடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே நவம்பர் 15-ந்தேதி (நேற்று) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதாக டிரம்ப் அறிவித்து இருந்தார். அதன்படி அவர் இன்று அந்த அறிவிப்பை வெளியிட்டார். 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.

இதையடுத்து அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக அமெரிக்க மத்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து உள்ளார்.

டிரம்ப் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்கிறேன். அமெரிக்காவின் மறுபிரவேசம் இப்போதே தொடங்குகிறது என்றார்.

டிரம்ப் அதிபர் தேர்தலில் 3-வது முறையாக போட்டியிட உள்ளார். கடந்த தேர்தலில் போட்டியிட்ட அவர் ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தார். ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி தனது தோல்வியை ஏற்க டிரம்ப் மறுத்தார். அவரது ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News