இலங்கையில் பெட்ரோல், டீசல் கடும் தட்டுப்பாடு
- இலங்கையில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் கடந்த பிப்ரவரி மாத மத்தியில் இருந்து நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் மக்கள் காத்துக்கிடக்கின்றனர்.
- இலங்கைக்கு ஒரு நாளைய குறைந்தபட்ச டீசல் தேவை 5,000 டன்கள்.
கொழும்பு:
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. அங்கு உணவு பொருட்கள், மருந்து பொருட்கள், சமையல் கியாஸ், பிற எரிபொருட்கள் போன்றவற்றிற்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் கடந்த பிப்ரவரி மாத மத்தியில் இருந்து நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் மக்கள் காத்துக்கிடக்கின்றனர். இதுபற்றி இலங்கை எரிசக்தி மந்திரி காஞ்சனா விஜேசேகரா கூறுகையில், "இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் கடைசி டீசல் கப்பல் 16-ந் தேதியும், பெட்ரோல் கப்பல் 22-ந் தேதியும் வந்தடையும் என்று எதிர்பார்க்கிறோம்" என தெரிவித்தார்.
இந்த கப்பல்களுக்காக இலங்கை ஆவலுடன் காத்திருக்கிறது. இலங்கைக்கு ஒரு நாளைய குறைந்தபட்ச டீசல் தேவை 5,000 டன்கள். ஆனால் கடந்த வாரம் முன்னுரிமை அடிப்படையில் 3,000 டன்கள் வரை வினியோகிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதே போன்று தினசரி பெட்ரோல் தேவை 3,500 டன். ஆனால் 3,200 டன் அளவில் வினியோகிக்கப்படுகிறது எனவும் அவர் கூறினார்.