உலகம்

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் - பிரதமர் ரிஷி சுனக் சந்திப்பு

Published On 2024-02-22 03:55 GMT   |   Update On 2024-02-22 03:55 GMT
  • முதல்முறையாக மன்னர் சார்லஸ் மற்றும் ரிஷி சுனக் சந்திப்பு நடைபெற்றது.
  • என் துயரத்தை பெரும்பாலான சமயங்களில் குறைத்துள்ளன.

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் அந்நாட்டு பிரதமர் ரிஷி சுன்க் நேரில் சந்தித்து பேசினர். மன்னர் சார்லஸ்-க்கு புற்றுநோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, முதல்முறையாக மன்னர் சார்லஸ் மற்றும் ரிஷி சுனக் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

பக்கிங்காம் அரண்மனையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, மன்னர் சார்லஸ், "பல்வேறு அற்புதமான தகவல்கள் மற்றும் வாழ்த்து அட்டைகள் எனக்கு வந்துள்ளன. இவை என் துயரத்தை பெரும்பாலான சமயங்களில் குறைத்துள்ளன," என்று தெரிவித்தார்.

"நாங்கள் அனைவரும் உங்களுக்கு பின்புலமாக இருக்கிறோம். இந்த தேசம் உங்களுக்கு ஆதரவாக நிற்கிறது," என்று மன்னர் சார்லஸ்-இடம் ரிஷி சுனக் தெரிவித்தார்.

Tags:    

Similar News