உலகம்

ஜி7 மாநாட்டில் உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை

Published On 2025-06-18 05:39 IST   |   Update On 2025-06-18 05:39:00 IST
  • ஜி7 தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான பரிமாற்றங்கள் நடைபெற்றன.
  • பிரதமர் மோடி 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு கனடாவுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும்.

5 நாள் பயணமாக வெளிநாடு சென்றுள்ள பிரதமர் மோடி ஜி7 மாநாட்டில் பங்கேற்க நேற்று முன்தினம் மாலையில் கனடா சென்றார்.

கடைசி நாளான நேற்று மாநாட்டில் பங்கேற்பது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள கனடா நாட்டின் கல்காரி வந்தடைந்தேன். மாநாட்டில் பல்வேறு உலகத் தலைவர்களைச் சந்திப்பேன். முக்கிய உலகப் பிரச்சினைகள் குறித்த எனது சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்வேன். தெற்குலக நாடுகளின் முன்னுரிமைப் பிரச்சினைகளை வலியுறுத்துவேன்" என்று பதிவிட்டிருந்தார்.

மற்றொரு பதிவில், "உலகளாவிய முன்னேற்றத்திற்காக ஒன்றிணைவோம்! முக்கிய உலகளாவிய சவால்கள் மற்றும் சிறந்த கிரகத்திற்கான பகிரப்பட்ட அபிலாஷைகள் குறித்து ஜி7 தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான பரிமாற்றங்கள் நடைபெற்றன" எனத் தெரிவித்தார்.

ஜி7 மாநாட்டிற்கு இடையே ஜெர்மன் சான்சலர், கனடா பிரதமர் உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்களுடன் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்புகளில் எரிசக்தி பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடி 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு கனடாவுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும்.

Tags:    

Similar News