உலகம்

அமீரகம், கத்தார் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி

Published On 2024-02-15 13:14 GMT   |   Update On 2024-02-15 13:14 GMT
  • பிரதமர் மோடிக்கு கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி விருந்தளித்தார்.
  • கத்தார் பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்ட பிரதமர் மோடியை தூதரக அதிகாரிகள் வழியனுப்பினர்.

தோஹா:

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு அமீரக பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு கத்தார் சென்றார். அங்கு அவர் கத்தார் பிரதமரும், வெளியுறவு மந்திரியுமான ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியை சந்தித்துப் பேசினார்.

வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, நிதி மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். மேற்கு ஆசியாவின் சமீபத்திய பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து ஆலோசித்தனர். பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து மோடிக்கு கத்தார் பிரதமர் இரவு விருந்து அளித்து உபசரித்தார்.

இதற்கிடையே, கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் அகமது அல் தானியை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது மற்றும் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

இந்நிலையில், கத்தார் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார். அவரை தூதரக அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News