உலகம்

சக பயணிகளின் ஆதரவோடு விமானத்தின் இறக்கையில் நடந்த சென்ற பயணி

Published On 2024-01-27 06:27 GMT   |   Update On 2024-01-27 06:28 GMT
  • தாமதம் மற்றும் காற்று பற்றாக்குறை ஆகியற்றால் அந்த பயணி இந்த முடிவை எடுக்க காரணம்.
  • பெரும்பாலான பயணிகள் அந்த நபருக்கு ஆதரவு தெரிவித்த நிலையிலும் கைது செய்யப்பட்டார்.

விமானத்தில் பயணம் செய்யும்போது சில பயணிகள் வினோதமாக நடந்த கொள்வது வழக்கம். ஆனால் சற்று வித்தியாசமான சம்பவம் ஒன்று மெக்சிகோ நாட்டில் உள்ள விமான நிலையத்தில் நடைபெற்றுள்ளது.

விமானத்தில் இருந்த மற்ற பயணிகளின் ஆதரவோடு எமர்ஜென்சி கதவை திறந்து, விமான இறக்கையில் ஒய்யாரமாக நடந்து சென்றுள்ளார் ஒரு பயணி. இறக்கையின் பாதி தூரம் வரை சென்ற அந்த நபர், மீண்டும் விமானத்திற்குள் வந்தார். விமானத்தை சேதப்படுத்தவோ, அசம்பாவிதமான செயல்களிலோ ஈடுபடவில்லை.

ஆனால், விமான போக்குவரத்து பாதுகாப்பு விதிகளின்படி அந்த நபரை விமான ஊழியளர்கள் போலீசாரிடம் பிடித்துக் கொடுத்தனர்.

கவுதமாலாவிற்கு செல்வதற்கான ஏரோமெக்சிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சுமார் நான்கு மணி நேரம் காலதாமதம் ஆனதாக தெரிகிறது. இதனால் பயணம் செய்ய இருந்தோர் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும் காற்று குறைவான இடத்தில் அவர்கள் அமர்த்தி வைக்கப்பட்டதாக தெரிகிறது. குடிப்பதற்கு தண்ணீர் கூட வழங்கப்படவில்லை.

இதனால் மற்ற பயணிகளின் ஆதரவோடு எமர்ஜென்சி கதவை திறந்து அவ்வாறு செய்துள்ளார். விமானத்தில் இருந்த 77 பயணிகள் அந்த நபருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். என்றபோதிலும் விமான ஊழியர்கள் அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

அந்த நபருக்கு ஆதரவான இருந்து பயணிகள் "காலதாமதம், காற்று குறைபாடு பயணிகள் ஆரோக்கியதிற்கு கேடுவிளைவிப்பதாக இருந்தது. அவர் எங்கள் உயிரை காப்பாற்றினார் எனத் தெரிவித்தனர்.

Similar News