உலகம்

பூடான் அரசின் உயரிய விருதைப் பெற்றார் பிரதமர் மோடி

Published On 2024-03-22 10:52 GMT   |   Update On 2024-03-22 12:36 GMT
  • பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக பூடான் சென்றார்.
  • பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

திம்பு:

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக பூடான் புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பூடானில் உள்ள பரோ சர்வதேச விமான நிலையத்தில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினர் அவரை வரவேற்றனர்.

இந்நிலையில், பூடான் அரசர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் மற்றும் பிரதமர் ஷேரிங் டோப்கே ஆகியோர் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் மிக உயரிய விருதான ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ விருதை அளித்தனர். விருதைப் பெற்றுக்கொண்டதும் பிரதமர் மோடி இருவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்த விருது தரவரிசை மற்றும் முன்னுரிமையின்படி, ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ வாழ்நாள் சாதனைக்கான அலங்காரமாக நிறுவப்பட்டது. பூடானில் உள்ள மரியாதை அமைப்பின் உச்சமாக உள்ளது. இது அனைத்து உத்தரவுகள், அலங்காரங்கள் மற்றும் பதக்கங்களை விட முதன்மையானது.

இரு நாடுகளின் உறவை வலுப்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

Tags:    

Similar News