உலகம்

இருளை விலக்கி ஒளியை ஏற்படுத்துவதாக அமையட்டும்: கமலா ஹாரிஸ் தீபாவளி வாழ்த்து

Published On 2023-11-10 11:35 GMT   |   Update On 2023-11-10 11:35 GMT
  • இந்த தீபாவளி விருந்தில் 300-க்கும் அதிகமான விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
  • இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் இந்திய வம்சாவளியினர்.

வாஷிங்டன்:

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வாஷிங்டனில் உள்ள தனது அரசு இல்லத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். கமலா ஹாரிஸ் விடுத்த அழைப்பின் பேரில் 300-க்கும் அதிகமான விருந்தினர்கள் இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்திய வம்சாவளியினர்.

அப்போது பேசிய கமலா ஹாரிஸ், இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நடைபெறும் சூழலில், உலகம் எதிர்கொண்டிருக்கும் இருண்ட மற்றும் கடினமான நிலைக்கு ஒளி ஏற்படுத்தும் வகையில் தீபங்களின் பண்டிகையான தீபாவளியைக் கொண்டாடுவது முக்கியம்.

இருளை விலக்கி ஒளியை ஏற்படுத்துவதாக இந்த தீபாவளி அமையட்டும். பாலஸ்தீனத்தில் மக்கள் அடைந்து வரும் துயரம் மாற வேண்டும். அதே நேரம், இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள எடுக்கும் நடவடிக்கையை அமெரிக்கா ஆதரிக்கும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News