உலகம்

இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 8 பாலஸ்தீனியர்கள் சுட்டுக் கொலை

Published On 2023-07-03 21:45 GMT   |   Update On 2023-07-03 23:09 GMT
  • பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது.
  • இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.

ஜெனின்:

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.

ஹமாஸ் அமைப்பை போன்று மேலும் சில ஆயுதமேந்திய குழுக்கள் காசா முனை, மேற்கு கரையில் செயல்பட்டு வருகின்றன. அதேவேளை பாலஸ்தீனத்திற்கு மேற்கு கரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்தப் பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக் குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. நூற்றுக்கணக்கான வீரர்களை கோட்டைக்குள் அனுப்பியது.

இந்தத் தாக்குதலில் குறைந்தது 8 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

Tags:    

Similar News