சர்வதேச போலீஸ்: இன்டர்போல் ஆசிய குழுவில் உறுப்பினராக தேர்வான இந்தியா
- சிங்கப்பூரில் இன்டர்போல் அமைப்பின் 25-வது ஆசிய பிராந்திய மாநாடு நடைபெற்றது.
- மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
உலகம் முழுவதும் உள்ள காவல் துறையினர் இணைந்து சர்வதேச குற்றங்களை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் செயல்பட்டு வருவது இன்டர்போல் காவல் அமைப்பாகும்.
இந்நிலையில் இன்டர்போல் அமைப்பின் ஆசியக் குழுவின் உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் நடைபெற்ற இன்டர்போல் அமைப்பின் 25-வது ஆசிய பிராந்திய மாநாட்டில் நடைபெற்ற தேர்தலில் இந்தியா உறுப்பினராக தேர்வாகி உள்ளது.
இந்தியாவில் இன்டர்போல் விவகாரங்களுக்கு பொறுப்பான மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
இந்தியா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்ட்டது, குற்ற கும்பல்கள், சைபர் குற்றங்கள், மனிதக் கடத்தல், பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட முக்கிய பாதுகாப்புப் பிரச்சினைகளில் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்த உதவும் என சிபிஐ தெரிவித்துள்ளது.
இதன்மூலம், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்று சிபிஐ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.