உலகம்

ரஷியாவிடம் இருந்து ரூ.10 ஆயிரம் கோடிக்கு ஏவுகணைகள் வாங்க இந்தியா திட்டம்

Published On 2025-10-22 13:00 IST   |   Update On 2025-10-22 13:00:00 IST
  • சுதர்சன சக்ரம் என்று பெயரிட்ட இந்த வான்பாதுகாப்பு அமைப்பு ரஷியாவிடம் இருந்து வாங்கப்பட்டது.
  • பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு பயன்படுத்தப்பட்டது.

இந்தியா தனது வான்பாதுகாப்பில் எஸ்-400 வான் பாதுகாப்பை பயன்படுத்தி வருகிறது. சுதர்சன சக்ரம் என்று பெயரிட்ட இந்த வான்பாதுகாப்பு அமைப்பு ரஷியாவிடம் இருந்து வாங்கப்பட்டது. சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு பயன்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் வான் பாதுகாப்பு திறன்களை மேலும் வலுப்படுத்தும் வகையில் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புக்காக ரஷியாவிடமிருந்து சுமார் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தையை இந்தியா நடத்தி வருகிறது.

Tags:    

Similar News