உலகம்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.9 ஆக பதிவு

Published On 2025-08-17 03:48 IST   |   Update On 2025-08-17 03:59:00 IST
  • ஆப்கானிஸ்தானில் நேற்று நள்ளிரவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவானது.

காபுல்:

ஆப்கானிஸ்தானில் நேற்று நள்ளிரவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 11.05 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 36.83 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.01 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

ஆப்கானிஸ்தானில் கடந்த 13-ம் தேதி மற்றும் 8-ம் தேதி ஆகிய நாட்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது.

Tags:    

Similar News