உலகம்
ஆப்கானிஸ்தானில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
- ஆப்கானிஸ்தான்- தஜிகிஸ்தான் எல்லை அருகே நிலநடுக்கம்.
- முதற்கட்ட தகவலில் உயிரிச்சேதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இன்று மாலை 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானின் கந்துட் மாகாணத்தில் இருந்து தென்கிழக்கே 46 கி.மீ. தொலைவில், 10 கி.மீ, ஆளத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தாக அறவிக்கப்பட்டுள்ளது.
கந்துட் மாகாணம் ஆப்கானிஸ்தான்- தஜிகிஸ்தான் எல்லை அருகே அமைந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் காயம், உயிரிழப்பு அல்லது சொத்துகள் சேதம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் 2,200 பேர் உயிரிழந்துள்ளதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கடந்த மாதம் 4ஆம் தேதி 6.2 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்து. தொடர்ந்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டு அதிக சேதத்தை ஏற்படுத்தியது.