உலகம்
லண்டனில் ராஜ்நாத் சிங்குக்கு ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு
- பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று இங்கிலாந்து சென்றடைந்தார்.
- கடந்த 22 ஆண்டில் எந்த பாதுகாப்பு மந்திரியும் இங்கிலாந்து சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன்:
இந்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் 2 நாள் பயணமாக இன்று இங்கிலாந்து சென்றடைந்தார். லண்டன் விமான நிலையம் வந்த ராஜ்நாத் சிங்குக்கு ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இங்கிலாந்தில் அந்நாட்டு பாதுகாப்புச் செயலருடன் விரிவான சந்திப்பு நடத்துகிறார். லண்டனில் மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கரின் நினைவிடங்களுக்குச் செல்லும் அவர், அங்கு புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 22 ஆண்டில் எந்த இந்திய பாதுகாப்பு அமைச்சரும் இங்கிலாந்துக்கு சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.