உலகம்

ஈகுவடார் அதிபராக டேனியல் மீண்டும் தேர்வு

Published On 2025-04-16 04:30 IST   |   Update On 2025-04-16 04:30:00 IST
  • ஆளுங்கட்சி சார்பில் டேனியல் நோபா மீண்டும் போட்டியிட்டார்.
  • வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து முடிந்ததை தொடர்ந்து உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

குயிட்டோ:

தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் அதிபர் ஆட்சிமுறை நடைபெறுகிறது. அந்த நாட்டின் அதிபராக டேனியல் நோபா என்பவர் ஆட்சி செய்து வந்தார்.

அவருடைய பதவிக்காலம் முடிவு அடைந்ததை தொடர்ந்து அங்கு புதிய அதிபருக்கான தேர்தல் நடந்தது. இதில் ஆளுங்கட்சி சார்பில் டேனியல் நோபா மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து இடதுசாரி கட்சி பெண் வேட்பாளர் லூயிஸ் கோன்சலஸ் போட்டியிட்டார். வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து முடிந்ததை தொடர்ந்து உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இதில் டேனியல் நோபா 55.6 சதவீதம் வாக்குகளை பெற்று அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட லூயிசை காட்டிலும் 16,468 வாக்குகள் அதிகம் பெற்று ஈகுவடார் நாட்டின் அதிபராக டேனியல் மீண்டும் தேர்வாகி உள்ளார்.

Tags:    

Similar News